முட்டை வாங்க சென்ற மனைவி - கொலை செய்யப்பட்ட கணவன்!!

 
tn

தண்டையார்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

 சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வரும்  ரவுடி ஆனந்த் மனைவியிடம் முட்டை தோசை கேட்டுள்ளார். இதனால் அவரது மனைவி முட்டை வாங்க கடைக்கு சென்றதாக தெரிகிறது. கடைக்குச் சென்று முட்டை வாங்கி வருவதற்குள் ரவுடி ஆனந்த் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

murder

கொலை முயற்சி வழக்கு உட்பட 15க்கும் மேற்பட வழக்குகளில் தொடர்புடைய லொட்டை (எ) ஆனந்தை 8 பேர் கொண்ட கும்பல் அவரது வீடு புகுந்து கொடூரமாக வெட்டியுள்ளது. இதையடுத்து வீட்டிற்குள் வந்து பார்த்த போது ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக  தண்டையார்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது