சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ₹1 கூட தராத ஒன்றிய அரசு!

 
metro

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்க 2021 ஆகஸ்டிலேயே பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும், 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது RTIல் அம்பலமாகியுள்ளது. 

Tunneling works commenced for Chennai Metro Phase 2 Corridors


சென்னை மெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும்,  மத்திய அரசின் பங்கான  ரூ.7,425 கோடியை இதுவரை வழங்காமல் இருக்கும் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு.

tn

பொது முதலீட்டு வாரியம் சென்னை மெட்ரோ திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு 17.08.2021 அன்று ஒப்புதல் அளித்ததும் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதுவரை நிதி வழங்காமல் இருப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. நிதி ஒதுக்க தொடர்ச்சியாக பிரதமரிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும் நிதி கிடைக்காததால், ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.