தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?

 
1

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்தது. நேற்று இன்று வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் அண்ணாமலையின் வேட்பு மனுவில் பிழை இருப்பதாக தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். இதனை தொடர்ந்து அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்தது.

அந்த மனுவில் Non Judicial பத்திரத்தில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத Court Fee பத்திரத்தை பயன்படுத்தி அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அப்பட்டமான விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். அதாவது கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.மேலும் எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது அது நிராகரிக்கப்பட்டது என்றும் எண் 27 வேட்புமனுவானது Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்ததை தொடர்ந்து அண்ணாமலையின் வேட்புமனு தொடர்பாக எழுந்த சர்ச்சை ஓய்ந்துள்ளது..