ஜிம்மில் ஒர்க் அவுட் - இளம்பெண் மருத்துவர் மரணம்
ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அன்விதா என்ற இளம்பெண் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை பிரவீன் கண் மருத்துவராக உள்ளார். அன்விதா நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் ஜிம்மில் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணி அளவில் அன்விதா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் . அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்விதா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.