"அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன்" - நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
'தலைவர் 170' திரைப்படத்தில் ரஜினிகாந்த் , அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறார்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன் ,ராணா ,பகத் பாஸில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் , துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது.
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என்று பதிவிட்டுள்ளார்.