"எச்ஐவி உள்ளோரை அன்பால் அரவணைத்து ஆதரவு கரம் நீட்டுவோம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
m.k.stalin

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் எச்ஐவி என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நம் மக்களிடம் எச்ஐவி /எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை விளைவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டின் மையக்கருத்து எச்ஐவி / எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ,ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவந்து, அத்துடன் எச்ஐவி . எய்ட்ஸ் , கொரோனா பெருந்தொற்றுக்கு   முடிவு கட்டுவோம் என்பதே ஆகும்.

aids

தமிழ்நாட்டில் இத்தொற்றினை  கண்டறிய 2,953 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க, 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன.  எச்ஐவி உள்ள பெற்றோரின் கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்றாமல் தடுக்க, அனைத்து பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் ,மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும், நம்பிக்கை மையம் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

எச்ஐவி தடுப்பு கட்டுப்பாட்டு திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த, தொண்டு நிறுவனங்கள் , கூட்டமைப்புகள் போன்ற தன்னலமற்றோர்,  உண்மையான ஈடுபாடுடன் , மாநில அரசுடன் இணைந்து ஒத்தாசை புரிகிறது.  இதன் காரணமாக 2010, 2011ம் ஆண்டு 0.88 விழுக்காடாக இருந்த, தொற்று தற்போது 0.18 விழுக்காடாக குறைந்துள்ளது.

stalin

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒதுக்கப்பட கூடாது என்கின்ற உயரிய நோக்கில் தொற்றால் , பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய 25 கோடி ரூபாய் நிதியுடன் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வைப்பு நிதியில் இருந்து வருகையால் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்,  பணமின்றி மருத்துவமனைக்கு பயணம் செய்ய பேருந்து அட்டை வழங்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாத ஓய்வூதியம் தரப்படுகிறது.

cm stalin

நம் தாய் திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பயிலும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், விழிப்புணர்வை விதைக்கும் விதமாக , தன்னார்வ குருதி கொடை ஊக்குவிக்கும் வகையில்,  ஓவியப் போட்டியும் இணையதள வினாவிடை போட்டிகளும் , புதிய இந்தியா@75 என்கின்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.  இதுகுறித்த விழிப்புணர்வை முழுமையாக மக்களிடம் ஏற்படுத்தி,  நாட்டில் எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்போம்.  தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்கி வைக்காமல் உள்ளன்போடு  நடத்தி, அன்பையும் ,ஆதரவையும் அவர்களுக்கு அளித்து , நம்மில் ஒருவராக வாழ வைப்போம் என்றும்,  உறுதி பூண்டு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  எச்ஐவி உள்ளோரை அன்பால் அரவணைத்து ஆதரவு கரம் நீட்டுவோம் " என்று கேட்டுக்கொண்டுள்ளார்.