உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது!

 
chennai

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வர்த்தக மையத்தில் ஆங்காங்கே எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பப்பு செய்யப்படுகிறது.  மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னையை பற்றிய குறிப்பு, சென்னையின் முக்கிய இடங்கள், உணவுகள் தொடர்பான புத்தகம் மற்றும் திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் இலச்சினை கொண்ட நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன.   இம்மாநாட்டில்  50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு கிண்டியில் இந்து நந்தம்பாக்கம் வரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.