மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு..

 
உதயநிதி

மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

11வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாடானது ஜூலை 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.  மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 20500 தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். இணையும் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று உதயநிதி ஸ்டாலின் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மத்திய அமைச்சர்களுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.