ஒரு ஸ்கீம்க்கு இருபதாயிரம் கோடி ரூபாய் கொடுக்குறீங்க...ஏழைகளுக்கு ரூ.3000 தரக்கூடாதா? - எடப்பாடி ஆதங்கம்

 
1

அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

இந்த தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் மத்திய அரசு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஏன் கொடுக்கக் கூடாது. இன்றைக்கு அம்பானிக்கு கொடுக்குறீங்க. அதானிக்கு கொடுக்குறீங்க, டாட்டாவுக்கு கொடுக்குறீங்க, பிர்லாவுக்கு கொடுக்குறீங்க. ஒரு ஸ்கீம்க்கு இருபதாயிரம் கோடி ரூபாய் கொடுக்குறீங்க. அதில் மானியமாக 5 ஆயிரம் கோடி கொடுக்கறீங்க. ஏன் ஏழைகளுக்கு ரூ. 3000 கொடுத்தால் என்ன தப்பு.

உங்களுக்கு ஏழைகள் வாக்களித்திருக்கிறார்கள் தானே. ஏழைக்கும் ஒரு ஓட்டு தான், அந்த அம்பானிக்கும் ஒரு ஓட்டுத்தான். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஒருவருக்கு அவ்வளவு பெரிய தொகையை மானியமாக கொடுக்குறீங்க. ஒரு பேக்டரி கட்டுவதாக இருந்தால், ஒரு தொழிற்சாலை வரணும்னா பல்லாயிரக்கணக்கான கோடி மானியம் கொடுக்குறீங்க, ஒரு நபர் வாழ்வாதாரத்துக்குதானே இந்த தொகையை கேட்கிறோம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.