பேஸ்புக் போஸ்ட்டால் சிக்கலில் இளைஞர்! 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' பதிவு..!

 
1

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் நடைபெற்ற நாளில் கேரளாவின் காக்கநாட்டைச் சேர்ந்த முகமது ஷாஜி என்பவர் பேஸ்புக்கில் 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.அவர் மீது தேவையற்ற ஆத்திரமூட்டல், கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.