காதல் தோல்வியால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

 
poison

திருச்சி அருகே காதலியின் பெற்றோர் பெண் தர மறுத்ததால், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மலர்மன்னன். இவரது மகன் அஜித்குமார். இவர் மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, அஜித்குமார் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

trichy

இதனை தொடர்ந்து, கடந்த வாரம் அஜித்குமார், தனது பெற்றோருடன் காதலியின் வீட்டிற்கு சென்று  முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால், காதலியின் பெற்றோர் பெண் தர மறுத்துவிட்டனர். இதனால், அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அஜித்குமாரை, குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை மலர்மன்னன் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.