உடல் எடை குறைப்பு ஆபரேஷனில் இளைஞர் பலி - மருத்துவமனையை மூட உத்தரவு

 
tn

எடை சிகிச்சையின்போது இளைஞர் பலியான விவகாரத்தில் மருத்துவமனையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

tn

புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன்.  இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன்  பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார்.  26 வயதான ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 24ஆம் தேதி   ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.  கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்துள்ளார். ஹேமசந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனால் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது தொடர்பாக சென்னை பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது  குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

tn

இந்நிலையில்  எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.