தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன் - யுவராஜா அறிக்கை

 
eps

தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என த.மா.கா. கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார். 

பாஜக கூட்டணியில் த.மா.கா. இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்திக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 
தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என த.மா.கா. கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். 

தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள், பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி Kபழனிசாமி அவர்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.