அமெரிக்க அதிபர் தேர்தல் - 2 இந்தியர்கள் வெற்றி!

 
us us

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட 2 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மெரிக்காவில் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிட்டனர்.  வாக்குப் பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.  குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளையும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 210 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட 2 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சுஹாஸ் சுப்ரமணியம் விர்ஜினியா தொகுதியிலும், ராஜா கிருஷ்ணமூர்த்தி இலினியாஸ் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.