சிரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி..

 
சிரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி..  

சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு போர்  நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிரிய அரசாங்கத்திற்கும், குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முதலில் போர் மூண்டது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ஆரம்பத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. ஆனால் தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து  அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனாலும், அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. 

சிரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி..  

இந்நிலையில், சிரியா தலைநகரில் ஷியா பிரிவினருக்காக பிரபல இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இந்த வழிபாட்டு தலத்திற்கு தொழுகை நடத்த வருகை தருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழிபாட்டுத்தலம் அருகே திடீர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்; மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். விசாரணையில் காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்தது தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம்  பயங்கரவாத தாக்குதல் என்று சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.