இளைஞரின் வெறிச்செயல்... கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி..

 
 இளைஞரின் வெறிச்செயல்... கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி..

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூடு தக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 இளைஞரின் வெறிச்செயல்... கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி..

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆண்டனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டே பகுதியில் ராப் என்கிற தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.  நேற்று முற்பகலில் இந்தப் பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 18 வயது இளைஞர் ஒருவரு அங்கு வந்துள்ளார்.  யாரும் எதிர்ப்பாராத நிலையில் திடீரென் அந்த இளைஞர் அங்கிருந்த  பள்ளிக் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். இதனையடுத்து உடனடியாக   பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்கள் அந்த இளைஞர்கள் பிடிக்க முயன்றபோது, அவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  

 இளைஞரின் வெறிச்செயல்... கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி..

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த டெக்ஸாஸ் மாகாண காவல்துறையினர் , துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை என்கவுன்ட்டர் செய்தனர். இந்த சம்பவம்   குறித்து விளக்கமளித்துள்ள டெக்ஸாஸ் ஆளுநர், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர், உவால்டேயில் வசிக்கு 18 வயதே ஆனவர் என்றும், அவரது பெயர் சால்வடார் ராமோஸ் என்றும் தெரிவித்தனர். தான் வந்த வாகனத்தை பள்ளிக்கு வெளியே நிறுத்திவிட்டு   துப்பாக்கிகளுடனேயே பள்ளிக்குள் நுழைந்ததாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை அந்த இளைஞர் வைத்திருந்ததாகவும்  கூறினார்.   இந்த துப்பாக்கிச் சூழு சம்பவத்தில்  பள்ளி வளாகத்திலேயே 14 மாணவர்கள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மொத்தமாக 18 குழந்தைகளும், 3 ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர்.   

 இளைஞரின் வெறிச்செயல்... கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி..

 மேலும்  படுகாயம் அடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் இந்த  துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து டெக்ஸாஸ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  இன்று வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் சூரிய அஸ்தமனம் வரை அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று  அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.