இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதை நிறுத்தி விட்டதா?

 
tn

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

tn
இலங்கையில் தற்போது அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.  கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டு மக்கள்,  அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதுடன் வன்முறையில் ஈடுபட்டனர்.  இதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.  அத்துடன் ராஜபக்சே குடும்பம்  ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  அதன்படி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார் .இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா தற்போது தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

tn

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக பரவும் தகவல் உண்மை இல்லை  என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது  என்று  இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.