நாளை இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய?

 
gotabaya

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், விலைவாசி வின்னை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதற்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு  மக்கள் அனைரும் போராட்டத்தில் குதித்தனர்.  தொடர்ந்து பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் பலனாக முதலில் மகிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, பின்னர் அமைச்சர்கள், அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே என அனைவரும் அடுத்தடுத்து பதவி விலகினர்.  மக்கள் நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.   இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக  கடந்த மாதம் 21 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

srilanka protest

இலங்கையில் இருந்து சிங்கப்பூர் தப்பிச்சென்ற கோத்தபய, பின்னர் விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த11ம் தேதி தாய்லாந்து சென்றார். அந்நாட்டின் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவா் தூதரக கடவுச்சீட்டு வைத்திருப்பதால் தங்கள் நாட்டில் 90 நாள்கள் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து அரசு தெரிவித்தது இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிர்வாகிகள் கடந்த ஆக. 19-ஆம் தேதி அதிபா் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதையேற்று அதற்கான ஏற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.