பனிப்புயலை தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை - அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்

 
us flood

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து தற்போது மழை வெளுத்து வாங்கி வருவதால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில்  கடும் பனிப்புயல் வீசியது. இந்த திடீர் உறைபனியால் அந்நாட்டு மக்கள் நிலைகுலைந்து போனர்.  வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால்  அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  வீடுகள், மரங்கள் , சாலைகளில் பல அடி உயரத்திற்கு  உறைபனி  சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கின.  இதனால் ஹீட்டகளை பயன்படுத்த முடியாமல் கடும் துன்பங்களை அனுபவித்தனர். அத்துடன் அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்தனர். 

US

இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.