பணம் கொட்டுகிறது; தயவுசெய்து பணம் அனுப்புவதை நிறுத்துங்கள் -நித்தியானந்தா வேண்டுகோள்

 
ன்

 உலகம் முழுவதிலும் இருக்கும் எங்கள் தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது.  அதனால் தயவுசெய்து  யாரும் பணம் அனுப்ப வேண்டாம்.  பணம் அனுப்புவதை நிறுத்துங்கள் என்று தனது பக்தர்களுக்கு நித்தியானந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

 கைலாசா என்கிற தனிநாடு உருவாக்கி இருப்பதாக சொல்லும் நித்தியானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.   தமிழகத்தில் நடக்கும் ஆன்மீக திருவிழாவில் அந்தந்த கடவுள் போலவே வேடம் கொண்டு வீடியோவை வெளியிட்டு வந்த  நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் அவர் வீடியோ வெளியீடு இல்லாமல்  இருந்தது.

மி

 இந்த நிலையில் தான் நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாக செய்தி வருகிறது.   ஆனால் அது வதந்தி என்று நித்தியானந்தா விளக்கமளித்தார்.  அதே நேரம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னால் சரியாக சாப்பிட முடியவில்லை . தூக்கம் வருவதில்லை.  எந்த உணவை சாப்பிட்டாலும் குமட்டுகிறது. உடலில் சக்தி இல்லாமல் இருக்கிறது.  தன்னைச் சுற்றி எப்போதும் 27 மருத்துவர்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள் என்று தன் கைப்பட எழுதி முகநூலில் பதிவிட்டு இருந்தார். 

 நித்தியானந்தாவின் உடல் நிலை மோசம் அடைந்திருப்பது அறிந்த அவரது பக்தர்கள் பணம் அனுப்பி வைக்கிறார்கள்.  இதனால் நித்தியானந்தா,   என் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்ததில் இருந்து உலகம் முழுவதிலும் இருக்கும் எங்கள் தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கொட்டுகிறது.  அதனால் தயவு செய்து யாரும் பணத்தை அனுப்ப வேண்டாம்.  பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

 என் பக்தர்கள் நான் சொல்லுவதை  கேளுங்கள்.  உங்களுக்கு எங்கு பணம் அனுப்பினால் மனநிறைவு கிடைக்குமா அங்கு அனுப்புங்கள்.  என்னுடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு பணத்தையும் பொருட்களையும் அனுப்புவதற்கு இது நேரமில்லை.  உங்களுடைய பயனுக்காகவும் இந்த உலகத்தின் பயனுக்காகவும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டில் என் குருநாதர் அருணகிரி யோகேஸ்வர புகைப்படத்தின் முன்பாக ஒரு விளக்கை ஏற்றி அவர் இன்னும் என்னுடைய உடலில் அதிக தீவிரத்துடன் இருக்க வேண்டிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.