வதந்தியால் அரசியல் ஆலோசகர் உயிருடன் எரித்துக்கொலை

 
f

 குழந்தை கடத்தலில் தொடர்பு இருக்கிறது என்று வதந்தி பரவியதால் அரசியல் ஆலோசகர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

 மெக்சிகோ நாட்டை சேர்ந்த அரசியல் ஆலோசகர் டேனியல் பிகாசோ(வயது31).  மெக்சிகோ நாட்டின் நாடாளுமன்ற சட்ட பிரிவில் இவர் அரசியல் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். 

ff

 இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய மாகாணமான பாபட்லசோல்கோ   நகரில் குழந்தை ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறது.  இந்த குழந்தை கடத்தலில் டேனியல் பிகாசோவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக உள்ளூர் வாட்ஸப் குழுவில் வதந்தி பரவியிருக்கிறது . 

இந்த பரபரப்பான சூழலில் டேனியல் பிகாசோபாபட்லசோல்கோ நகரில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அப்போது உள்ளூரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் டேனியல்  பிகாசோவை  சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.   அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் அந்த கும்பலிடமிருந்து டேனியல் பிகாசோவை மீட்டு அவரை ரோந்து வாகனத்தில் ஏற்ற முயன்று இருக்கிறார்கள்.   ஆனால் அதையும் மீறி அந்த கும்பல் ஆவேசமாக டேனியல் பிகாசோவை அருகிலிருந்த வயல்வெளிக்கு இழுத்துக்கொண்டு ஓடி இருக்கிறார்கள்.

 அவசர அவசரமாக அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து இருக்கிறார்கள்.  இதில் முழுவதுமாக உடல் எரிந்து சம்பவ இடத்திலேயே அலறி துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்கள். 

குழந்தை கடத்தலில் தொடர்பு என்று வதந்தி பரவியதால் பரிதாபமாக அரசியல் ஆலோசகர் உயிரிழந்த சம்பவம் பாபட்லசோல்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.