ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்
Updated: Mar 4, 2022, 12:56 IST1646378780218
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனின், சேபோரிஷியா பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது அதிகாலையில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தாக்குதல்களால் அணு உலைகள் சேதமடையவில்லை எனவும், பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட அணுமின் நிலயத்தை ரஷ்ய படைகள் கைபற்றியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு பக்கங்களில் இருந்தும் உக்ரைனை தாக்கி வரும் ரஷ்ய படைகள் உக்ரைனுக்கு சொந்தமான முக்கிய இடங்களை கைப்பற்றி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் இருதரப்பிலும், உயிரிசேதங்கள் அதிகரித்து வருகின்றன.