சித்தியின் குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை

 
p

சித்திக்கு பிறந்த இரண்டு குழந்தைகளை மூச்சு திணற அடித்து கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இண்டியானா போலீஸ் நகரைச் சேர்ந்த சிறுவன் நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ்.    சிறுவனின் தந்தைக்கு இரண்டாவது திருமணத்தின் மூலமாக ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.   

c

 இதில் இரண்டு வயதான பெண் குழந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் வீட்டில் மூச்சுத்திணறி இறந்துள்ளது.   அதன் பின்னர்  அதே 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்,    பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் மூச்சு திணறிய நிலையில் இறந்து கிடந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணையில் இரண்டு குழந்தைகளையும் அவர்களது சகோதரன் நிக்கலஸ் கெட்ரோவிட்ஸ் கொலை செய்திருப்பது தெரியவந்தது.  இதையடுத்து 2018 ஆம் ஆண்டில் நிக்கலஸ் கைது செய்யப்பட்டான்.   அப்போது அவனுக்கு 13 வயது . தற்போது 17 வயதாகிறது.

மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நிக்கலஸ் குற்றவாளி என்பது உறுதியானது .  இதை எடுத்து தற்போது 17 வயதாகும் சிறுவனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.    100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.