துருக்கி சுரங்க வெடி விபத்து: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

 
துருக்கி சுரங்க வெடி விபத்து: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

 துருக்கியில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக் அதிகரித்துள்ளது.   

துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது.  இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் ( அக்டோபர் 14) வழக்கம்போல் நூற்றுக்கும் அதிகமான  தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.  அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் தீ விபத்தில்  சிக்கிக்கொண்டனர்.  

துருக்கி சுரங்க வெடி விபத்து: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த  மீட்புக்குழுவினர், போராடி  சுரங்கத்தில் சிக்கியிருந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.  முதலில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது.  மீட்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க,  காயமடைந்தவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்படி    நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.