கிறிஸ் கெயிலுடன் விஜய் மல்லையா - புகைப்படங்கள் வைரல்

 
vijay mallaya gayle

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தான் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்றை விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் தற்போது இங்கிலாந்து வசித்து வருகிறார். கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான அசையும் அசையாகச் சொத்துக்களை இந்திய அரசு தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.  இந்தியாவில் பல்வேறு நிதி ஆதாய குற்றங்கள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்து நாட்டில் இருந்து விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 


இந்நிலையில், விஜய் மல்லையா மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எனது சிறந்த நண்பரான கிறிஸ்டோபர் ஹென்றி கெயிலை சந்தித்ததில் மகிழ்ச்சி. யுனிவர்ஸ் பாஸ். நான் அவரை பெங்களூரு அணிக்காக விளையாட தேர்வு செய்து காலத்தில் இருந்து எங்களது அற்புதமான சூப்பர் நட்பு தொடர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ள கிறிஸ் கெயில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை அவர் பெங்களூரு அணிக்காக 85 போட்டிகளில் விளையாடி 3,163 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் 19 முறை அரை சதமும், 5  சதமும் அடங்கும்.  இந்நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் சந்தித்துள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. விஜய் மல்லையாவின் இந்த பதிவை கிறிஸ் கெயில் ரீடுவிட் செய்துள்ளார்.