தன் விரலை கடித்த எலியை கடித்துக் கொன்ற கல்லூரி மாணவி!

 
china

சீனாவில் தன் விரலை கடித்த எலியை பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவியை எதிர்பாராதவிதமாக எலி ஒன்று கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார். அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.

எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோல யாருமே செய்ய வேண்டாம் என அந்த மானவியின் தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.