சீனர்கள் 3 குழந்தைகளை பெற்றுகொள்ள மானியம், வரிகுறைப்பு சலுகைகளை அறிவித்துள்ள அரசு..

 
சீனர்கள்

சீன தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுகொள்வதை  ஊக்கப்படுத்த பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகிலேயே  அதிக மக்கள் கொண்டுள்ள நாடு சீனா. மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த கடந்த 2016 ம் ஆண்டுக்கு முன்புவரை ஒற்றைக் குழந்தை திட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016க்கு பிறகு ,  2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு பெரிதாக வரவேற்பு இல்லை..

சீனர்கள்

இந்நிலையில், சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் கடந்த மே மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்திதிருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் குறைந்து,  முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்தில் பொருளாதாரம்,  வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் இரண்டு குழந்தைகளு க்கு பதிலாக மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த மே மாதம் சீன அரசு அறிவித்தது.

சீன குழந்தைகள்

சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள  ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.  பீஜிங்,  சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்துக்கொள்ல தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற சலுகைகளை அறிவித்து வருகிறது.