நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்!

 
earth

நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவானது நியுசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும், சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கபெறவில்லை. இருப்பினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.