மகளுக்காக தந்தை செய்த செயல்.. காண்போரை நெகிழச் செய்யும் புகைப்படம்..

 
தந்தை - மகள்

தலையில் அறுவை சிகிசை செய்துகொண்ட தன் மகளுக்காக, தானும் அதேபோல் ஷேவ் செய்து கொண்ட தந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 அப்பா - மகள் உறவை  அத்தனை எளிதாக வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.  ஒரு பெண் நண்பன், சகோதரன், கணவன், மகன் என தன் வாழ்நாளில் எத்தனை உறவுகளை சந்தித்தாலு, அப்பா மட்டுமே என்றைக்கும் சூப்பர் ஹீரோ...  பொதுவாகவே  ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும்தான் பிடிக்கும் என்பார்கள். உளவியல் ரீதியாக அது உணமையும் கூட..  அத்தககைய அற்புதமான பிணைப்பை கொண்டது தந்தை - மகள் உறவு..   ஒரு தந்தை தன் மகளுக்காக எதையும் செய்யத் துணிவார்.. அப்படி தன் மகளுக்கான அப்பா செய்த  ஒரு காரியம்  இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தை - மகள்

மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தையின் தலையில் பாதியளவு முடி  ஷேவ் செய்யப்பட்டு, தையல் போடப்பட்டிருக்கிறது.  அந்த குழந்தைக்கு மனதளவில் தன்னம்பிக்கை கொடுக்க அவரது தந்தையும் அதே போல் தன் தலையை ஷேவ் செய்திருக்கிறார்.  அதில்   மகளுக்கு இருப்பது போலவே தையல் போட்டது போன்று தனது சிகையை மாற்றியமைத்திருக்கிறார்.  அந்த புகைப்படத்தில் இருப்பவர்களின் விவரம் மற்றும் எப்போது, எங்கு எடுக்கப்பட்ட புகைப்படம்  என்ற விவரம் தெரியவில்லை.

அப்பா - மகள்
 
ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், “இந்த பிஞ்சு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய அப்பா தனது தலையிலும் அப்படி இருப்பதை போல ஷேவ் செய்துள்ளார்! என் கண்கள் கலங்குகிறது” என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.  ட்விட்டரில் இந்த புகைப்படத்தை 8,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கின்றனர்.. 1,088 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். மகளுக்கான  தந்தை செய்த இந்த  சம்பவம், கான்போரிடையே  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.