இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

 
Srilanka

இலங்கை நாட்டிற்கு அருகே நடுக்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து1,326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.