உக்ரைன் அதிபருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

 
Us

சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆதரவு இல்லை என உக்ரைன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது டிரம்ப் ரஷ்ய போர் குறித்து ஜெலன்ஸிகியிடம் நேரடியாக பல எச்சரிக்கைகளை விடுத்தார். அதாவது, ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார்.
போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவை புறக்கணித்தும் ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என ட்ரம்ப் தெரிவித்தார்.